2015-06-01 15:56:00

வாரணாசி மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்


ஜூன்,01,2015 வாரணாசி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி யூஜின் ஜோசப் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

1958ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்த அருள்பணி யூஜின் ஜோசப் அவர்கள், வாரணாசி மறைமாவட்டத்தில் இணைந்து, 1985ம் ஆண்டு அருள்பணியாளராக அருள் பொழிவு பெற்றார்.

ஆங்கில இலக்கியத்திலும், மேலாண்மைத் துறையிலும் பட்டங்கள் பெற்ற யூஜின் ஜோசப் அவர்கள், 2013ம் ஆண்டு முதல், வாரணாசி மறைமாவட்டத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றி வந்தார்.

வாரணாசி மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய Raphy Manjaly அவர்கள், அலகாபாத் மறைமாவட்ட ஆயராக 2013ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டதையடுத்து, வாரணாசி மறைமாவட்டம் கடந்த ஈராண்டுகளாக ஆயரின்றி இருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.