2015-05-30 16:12:00

நேபாளம்-வேசாக் விழாவைச் சிறப்பிக்கும் மக்களுக்கு வாழ்த்து


மே,30,2015. ஜூன் 1, வருகிற திங்களன்று நேபாளத்தில் வேசாக் என்ற புத்தரின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், பல துன்பங்களுக்கு மத்தியில் இவ்விழாவைச் சிறப்பிக்கும் இம்மக்களுக்கு இவ்விழா ஆறுதலையும், ஒருமைப்பாட்டுணர்வையும் வழங்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வேசாக் விழாவின் உணர்வுகள், இக்காலத்திய சவால்களுக்கு உலகினர் பதில் அளிப்பதற்குத் தூண்டுகிறது என்றும், காலநிலை மாற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து புதிய திட்டங்களை ஐ.நா. வகுத்துவரும் இவ்வேளையில் புத்தரின் போதனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிப்போம் என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.

புத்தா பூர்ணமா என்ற Vesak நாள் இலங்கை, நேபாளம், திபெத், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மலேசியா, மியான்மார் என பல நாடுகளில் பல்வேறு தினங்களில் சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.