2015-05-27 16:04:00

ஜம்மு ஸ்ரீநகர் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மரணம்


மே,27,2015 ஜம்மு ஸ்ரீநகர் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரான பீட்டர் செலஸ்தீன் எலம்பசேரி (Bishop Peter Celestine Elampassery) அவர்கள், மே 27, இப்புதன் அதிகாலை 4 மணிக்கு இறையடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

77 வயதான ஆயர் எலம்பசேரி அவர்கள், கேரளாவின் Bharananganam என்ற ஊரில் அமைந்துள்ள கப்புச்சின் ஆசிரமத்தில் இப்புதன் காலை, மாரடைப்பால் காலமானார் என்று இந்திய ஆயர் பேரவைச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

1938ம் ஆண்டு பிறந்த எலம்பசேரி அவர்கள், தன் 28வது வயதில் அருள் பணியாளராகவும், 60வது வயதில் ஆயராகவும் அருள் பொழிவு பெற்றார். 2014ம் ஆண்டு தன் 77வது வயதில், ஆயர் பணியிலிருந்து ஒய்வு பெற்றார்.

ஆயர் எலம்பசேரி அவர்களின் இறுதிச் சடங்கு, மே 30, வருகிற சனிக்கிழமை Bharananganam கப்புச்சின் ஆசிரமத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.