2015-05-27 15:52:00

உலக நலவாழ்வு நிறுவனம், 68வது அவையில் எடுத்த முடிவுகள்


மே,27,2015 கொள்ளை நோய் தடுப்பு, காற்று மாசுபாடு, தகுந்த வழிகளில் உணவளிக்கும் இலக்குகள், வலிப்பு நோய் ஆகிய முக்கிய பிரச்சனைகள் குறித்த முடிவுகளை, ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனமான WHO தன் 68வது அவையில் கலந்து பேசியது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் மே 18 முதல் 26 முடிய நடைபெற்ற WHO உலக அவையில், வறுமைப்பட்ட நாடுகளில், தகுந்த தடுப்பு மருந்துகள் சென்றடையும் வழிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என்று ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.

ஒவ்வோர் ஆண்டும், காற்று மாசுப்பாட்டால் 80 இலட்சத்திற்கும் அதிகமானோர் இறக்கின்றனர் என்று WHO வெளியிட்ட ஓர் அறிக்கையைத் தொடர்ந்து, இவ்வாண்டு நடைபெற்ற உலக அவையில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

உலக மக்களுக்கு, குறிப்பாக வறுமைப்பட்ட நாட்டு மக்களுக்கு தகுந்த வழிகளில் உணவளிக்கும் இலக்குகளை, 2025ம் ஆண்டுக்குள் முற்றிலும் அடையக்கூடிய வழிமுறைகள், ஜெனீவாவில் நடைபெற்ற WHO உலக அவையில் விவாதிக்கப்பட்டன.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.