மே,25,2015. ஓர் இளம் மன நோயாளி தேவ நிந்தனைக் குற்றத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுடன் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள கிறிஸ்தவக் காலனி ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
மன நோயாளியும், போதைப்பொருளுக்கு அடிமையானவருமான Humayun Masih என்ற இளைஞர், பத்திரிகையில் வந்த குரான் புனித வார்த்தைகளை எரித்தார் என்ற குற்றச்சாட்டுடன் Dhup Sarri Lahore என்ற இடத்திலுள்ள கிறிஸ்தவக் கோவில் ஒன்றையும், கிறிஸ்தவக் குடியிருப்பையும் கொள்ளையடித்த பாகிஸ்தான் இஸ்லாமிய குழு ஒன்று, பின்னர் அனைத்தையும் தீக்கிரையாக்கியுள்ளது.
தினப்பத்திரிகையை எரித்த Humayun Masih கைதுச் செய்யப்படவேண்டும் என்ற இஸ்லாமிய தீவிரவாத கும்பலின் கோரிக்கையை பாகிஸ்தான் காவல் துறை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மனநிலை பாதிக்கப்பட்ட Humayun Masih என்ற இளைஞர், தற்போது எங்கிருக்கிறார், அவருக்கு என்ன நேர்ந்தது என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |