2015-05-23 16:06:00

தூய ஆவியார் சீடத்துவப் பாதையில் நம்மை வழிநடத்துகிறார்


மே,23,2015. "ஒவ்வொரு நாளும் நாம் தூய ஆவியாரிடம் செபிப்போம்; அவர் கிறிஸ்துவில் சீடத்துவப் பாதையில் நம்மை வழிநடத்துகிறார்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக ஒன்பது மொழிகளில் இச்சனிக்கிழமையன்று வெளியானது.

மேலும், தூய ஆவியார் பெருவிழாவான இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், மே 24, இஞ்ஞாயிறு, சீனத் திருஅவைக்காகச் செபிக்கும் நாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. இச்செப நாளை, 2007ம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் உருவாக்கினார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.