மே,14,2015. "அன்புப் பெற்றோரே, அதிகப் பொறுமை கொண்டிருங்கள்; உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து மன்னியுங்கள்" என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் Twitter செய்தியாக இவ்வியாழன் காலை வெளியானது.
திருத்தந்தையின் Twitter முகவரியாக விளங்கும், @pontifex என்ற இணையதள குறிப்பின்படி, இவ்வியாழன் வெளியான Twitter செய்தி, திருத்தந்தையின் 550வது செய்தி என்றும், திருத்தந்தையின் செய்திகளைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை, 60,70,000 என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக, ஒவ்வொருநாளும் இத்தாலியம், இலத்தீன், ஸ்பானியம், ஜெர்மன், ஆங்கிலம், போலந்து, பிரெஞ்சு, போர்த்துகீசியம், மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் திருத்தந்தையின் Twitter செய்திகள் வெளியாகி வருகின்றன.
கொரியா, இலங்கை, பிலிப்பின்ஸ் ஆகிய ஆசிய நாடுகளுக்கு அவர் திருத்தூதுப் பயணங்கள் மேற்கொண்ட வேளையில், அந்தந்த நாடுகளின் பெரும்பான்மை மொழிகளில் திருத்தந்தையின் Twitter செய்திகள் வெளியாயின.
இவ்வாண்டு சனவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலங்கையில் திருத்தூது பயணம் மேற்கொண்ட வேளையில், சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் Twitter செய்திகளை வெளியிட்டார் என்பதும், "இறைவன் இலங்கையை ஆசீர்வதித்து காப்பாராக" என்பது சனவரி 15ம் தேதி அவர் வெளியிட்ட செய்தி என்பதும் குறிப்பிடத்தக்கவை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |