2015-05-13 16:16:00

பேச்சு வார்த்தைகள் மட்டுமே அமைதியைக் கொணரும் - கர்தினால் Rai


மே,13,2015. மத்தியக் கிழக்குப் பகுதியில், பேச்சு வார்த்தைகள் வழி ஒன்றுதான் அமைதியை உறுதி செய்யுமே தவிர, இராணுவ முயற்சிகள் அனைத்தும், ஒன்றுக்குப் பின் ஒன்றாக, போரை வளர்க்கும் என்று மாரனைட் வழிபாட்டுமுறை கத்தோலிக்க முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Boutros Rai அவர்கள் கூறினார்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதிவேண்டி, கர்தினால் Boutros Rai அவர்கள் ஆற்றிய திருப்பலியில், மிக அதிக அளவு வன்முறையை அனுபவித்து வாழும், பாலஸ்தீனம், ஈராக், சிரியா, ஏமன் ஆகிய நாட்டின் மக்கள் அனைவரும் நீடித்த அமைதிக்காக ஒவ்வொரு நாளும் ஏங்கிக் காத்திருக்கின்றனர் என்று தன் மறையுரையில் கூறினார்.

லெபனான் நாடு, மே மாதம் 25ம் தேதிக்குள் புதிய அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Boutros Rai அவர்கள், லெபனான் நாட்டின் துயரங்கள் நீங்க ஒரே வழி, அமைதியின் அரசர் கிறிஸ்து தங்கள் உள்ளங்களில் ஆட்சி செய்வதே என்று வலியுறுத்தினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.