2015-05-13 16:37:00

குடிபெயர்ந்தோர் சட்டம் குறித்த மறு ஆய்வு - அமெரிக்க ஆயர்கள்


மே,13,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் தகுந்த அனுமதியின்றி நுழையும் மனிதர்களை, குறிப்பாக, வலுவிழந்த குழுவினரை, குற்றவாளிகளைப் போல நடத்தும் போக்கினை அரசு கைவிடவேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் பேரவை கூறியுள்ளது.

சரியான அனுமதியின்றி நாட்டிற்குள் நுழைவோர் மீது அமெரிக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, அமெரிக்க ஆயர்கள் பேரவையின் குடிபெயர்ந்தோர் பிரிவு, மே 11, இத்திங்களன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அனுமதியின்றி நாட்டிற்குள் நுழைவோரை உடனடியாகக் கைது செய்வது, சரியான வழக்கு விசாரணை ஏதுமின்றி அவர்களைச் சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் பேரவையின் குடிபெயர்ந்தோர் பிரிவின் தலைவர், ஆயர்  Eusebio Elizondo அவர்கள் கூறினார்.

"மனித மாண்பை விடுதலைச் செய்வது: அமெரிக்க அரசின் குடிபெயர்ந்தோர் சட்டங்கள் குறித்த மறு ஆய்வு" என்ற தலைப்பில் அமெரிக்க ஆயர்கள் இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் நுழைவோர் அனைவரும் மனித மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.