2015-05-11 16:26:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகள் குறித்து உரையாடல்


மே,11,2015. காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தை போப் இரண்டாம் Tawadros அவர்கள், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை தொலைபேசி வழி தொடர்புகொண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகள் குறித்து உரையாடினார்.

கிரிஸ்தவ ஒன்றிப்பை நோக்கி முயற்சிகள் மேற்கொண்டுள்ள இவ்விரு கிறிஸ்தவ சபைகளின் அர்ப்பணம் தொடரவேண்டும் என்றும், கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை இரு சபைகளும் ஒரே நாளில் சிறப்பிப்பது குறித்து ஒத்திசைவு ஏற்படவேண்டும் என்றும் திருத்தந்தையுடனான தொலைபேசி உரையாடலின்போது கேட்டுக்கொண்டார் காப்டிக் ஆர்த்தாடாக்ஸ் தலைவர்.

ஏற்கனவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று காலை போப் இரண்டாம்  Tawadros அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பியிருந்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை Tawadros அவர்களும் வத்திக்கானில் சந்தித்ததன் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு திருத்தந்தையின் இந்த செய்தி அனுப்பப்பட்டிருந்தது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.