2015-05-06 16:41:00

சீனாவில் அன்னை மரியாவுக்கு மே மாத வணக்கம்


மே,06,2015. ஆன்மீக அளவில் நாம் சக்தியிழந்து, வறுமைபட்டிருக்கிறோம்; எனவே, மனம் திரும்பி, அதிகம் செபிக்கவேண்டும் என்று சீனாவின் Xian Xian Bei மறைமாவட்டத்தின் ஆயர், ஜோசப் லி லியான் குயி அவர்கள் கூறினார்.

அன்னை மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தைத் துவக்கிவைத்து திருப்பலியாற்றிய ஆயர், லியான் குயி அவர்கள், இறை வார்த்தைக்குச் செவி மடுப்பதும், மரியாவின் பரிந்துரையோடு செபிப்பதும் இம்மாதத்தின் முக்கியப் பணிகள் என்று எடுத்துரைத்தார்.

சீனாவின் Shaan Xi பகுதியின், சிலுவைப் பாதை மலையில் அமைந்துள்ள மரியன்னையின் திருத்தலம், சீனாவின் பல பகுதிகளிலிருந்தும் திருப்பயணிகளை கவர்ந்துள்ளது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

மலைப்பாங்கான இத்திருத்தலத்தில், செபமாலை, சிலுவைப் பாதை ஆகிய பக்தி முயற்சிகளை மேற்கொள்ளும் இளையோர், கூடுதலாக, அம்மலைப் பகுதியில் மண்டிக்கிடக்கும் கழிவுப் பொருள்களை அகற்றி, இயற்கையைப் பாதுகாப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பு கூறுகிறது.

Hu Zhuang Shan என்ற பெயர் தாங்கிய மற்றொரு மரியன்னை திருத்தலத்தின் 120ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, 2000த்திற்கும் அதிகமான பக்தர்கள் சென்றனர் என்று Fides செய்திக் குறிப்பு மேலும் கூறியுள்ளது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.