2015-05-02 15:48:00

உலகில் உணவுப் பகிர்வில் சமத்துவம் அவசியம், பான் கி மூன்


மே,02,2015. மனித சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினருக்கும் தேவையான அளவுக்கு அதிகமான உணவை இந்த உலகம் உற்பத்தி செய்தாலும், இன்னும், ஒன்பதுக்கு ஒருவர் வீதம் பசியோடு படுக்கைக்குச் செல்கின்றனர் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

இத்தாலியின் மிலானில் நடைபெற்று வரும் எக்ஸ்போவின் தொடக்க நிகழ்வில், நேரடி காணொளிச் செய்தி வழங்கிய பான் கி மூன் அவர்கள், இந்த எக்ஸ்போவில் ஐ.நா. பங்குகொண்டு, உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வருவது குறித்த மகிழ்வை வெளியிட்டார்.

உலக அளவில் பகிர்ந்தளிக்கப்படும் உணவில் காணப்படும் சமத்துவமின்மை களையப்படுமாறும், பசியற்ற உலகத்தை உருவாக்குமாறும் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார் பான் கி மூன்.

பசியற்ற உலகத்தை உருவாக்குவதற்கு ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது என்றும், இந்த மிலான் எக்ஸ்போ உலகக் கண்காட்சியைக் காணச் செல்லும் அனைவரும் ஐ.நா.வின் இவ்வேண்டுகோளை கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

ஆதாரம்: UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.