2015-05-01 15:45:00

கடுகு சிறுத்தாலும்...: சாவைத் தாண்டியும் நம்பிக்கை தொடரும்


தன்னம்பிக்கை வளர்க்கும் வகுப்பில் மூவர் கலந்து கொண்டனர்.

மூவரிடம் ஒரே கேள்வி கேட்கப்பட்டது. “சவப்பெட்டியில் நீங்கள் கிடத்தப்பட்டு குடும்பத்தார் வருத்தத்துடன் சூழ‌ இருக்கும்போது, உங்களைப் பற்றி என்ன‌ சொல்லவேண்டும் என்று விரும்புவீர்கள்?”  என்பதே அந்த கேள்வி.

முதலாம் மனிதர், “இதோ இங்கே கிடப்பவன் உலகில் சிறந்த‌ மருத்துவன் மட்டுமில்லை, நல்ல‌ குடும்பஸ்தனும்கூட‌” என சொல்லப்படவேண்டும் என விரும்பினார்.

இரண்டாம் மனிதரோ, “இவர் ஒரு சிறந்த‌ ஆசிரியர், இவரால் பல‌ வெற்றிகரமான‌ மாணவர்கள் உருவாக்கப்பட்டனர் என்று சொல்ல‌ வேண்டும்” என்றார்.

மூன்றாமவர் தன் விருப்பத்தை இவ்வாறு வெளியிட்டார், “அதோ பாருங்கள், அவன் அசைகிறான் என்று சொல்லவேண்டும்”என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.