ஏப்.28,2015. திருப்பீடத்துக்கும், ஈக்குவதோர் நாட்டுக்கும் இடையே நிலவும் உறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், ஈக்குவதோர் அரசுத்தலைவர் Rafael Correa Delgado அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
வருகிற ஜூலை 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈக்குவதோர் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத் தக்கது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு விடுத்துவரும் அழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது Greenpeace உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு. வத்திக்கான் நடத்திய வெப்பநிலை மாற்றம் குறித்த அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய Greenpeace அமைப்பின் பிரதிநிதிகள், நூறு விழுக்காடு மறுசுழற்சி செய்யக்கூடிய சக்திக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |