2015-04-27 16:36:00

பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு மும்பை கர்தினாலின் ஆறுதல்


ஏப்.27,2015. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒடுமைப்பாட்டையும் நெருக்கத்தையும் அறிவிக்கும் அதேவேளை, அம்மக்களுக்கு உதவ மருத்துவக்குழு ஒன்றை, மும்பை உயர்மறைமாவட்டம் அனுப்ப உள்ளதாக அறிவித்தார் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தான் நேரடியாகச் சென்றுச் சந்தித்ததாகவும், அவர்களின் துன்பங்களில் தான் பங்குகொள்வதாகவும் அறிவித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இவ்வாரம் முழுவதும் மும்பை உயர்மறைமாவட்டத்தின் அனைத்துக் கோவில்களிலும், துறவு இல்லங்களிலும், கத்தோலிக்க நிறுவனங்களிலும் சிறப்பு செபவழிபாடுகள் இடம்பெறும் எனவும் அறிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை ஆற்றிவரும் காரித்தாஸ் இந்தியா அமைப்பின் மூலம் உதவிகளை வழங்க உள்ளதாகவும் மும்பை கர்தினால் கிரேசியஸ் அவர்கள் மேலும் கூறினார்.

ஆதாரம்: AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.