2015-04-25 15:33:00

இந்து மகாசபா அறிக்கைக்கு இந்திய ஆயர்கள் கண்டனம்


ஏப்.25,2015. ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் அல்ல, ஆனால் அவை மனமாற்றம் இடம்பெறும் தொழிற்சாலைகள் என்ற இந்து மகாசபாவின் அறிக்கைக்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது இந்திய ஆயர் பேரவை.

Akhil Bharatiya Hindu Mahasabha பொதுச் செயலர் Munna Kumar Shukla அவர்களின் இக்கூற்று கடுங்கோபத்தை எழுப்பக்கூடியது மற்றும் இது, பொறுப்பற்ற முறையில் வெளியிடப்பட்டுள்ளது என்று இந்திய ஆயர்கள் தங்களின் கண்டன அறிக்கையில்   குறிப்பிட்டுள்ளனர்.

ஆலயத்தைத் தாக்குவது சட்டத்துக்குப் புறம்பானது அல்ல எனவும், ஆலயங்களைத் தாக்குவோருக்கு அரசு விருது வழங்க வேண்டுமென்று தான் விரும்புவதாகவும் Shukla அவர்கள் கூறியதாக ஊடகங்கள் கூறியுள்ளன.

Shukla அவர்களின் இக்கூற்றால், கிறிஸ்தவ சமூகம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது மற்றும் அதன் மென்மையான உணர்வுகள் காயப்பட்டுள்ளன என்றுரைக்கும் ஆயர்கள், இக்கூற்று இந்தியாவின் தரம், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு முரணானவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் என, இந்திய ஆயர் பேரவையின் நிலைத்த குழுவைச் சேர்ந்த ஏறக்குறைய நாற்பது பேர் பெங்களூருவில் நடத்திய கூட்டத்தின் இறுதியில் இவ்வெள்ளியன்று இக்கண்டன அறிக்கையை வெளியிட்டனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.