2015-04-23 16:48:00

விருதுநகரில் 15 பள்ளிகளுக்கு சிறந்த சுற்றுச்சூழல் விருது


ஏப்.23,2015. விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை சிறப்பாக பராமரிக்கும் 5 அரசு பள்ளிகள் உட்பட 15 பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டு சுற்றுச்சூழல் துறை சார்பில் ரூ.2 இலட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய பசுமைப் படை இயங்கி வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 50 மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தேசிய பசுமைப் படை செயல்பட்டு வருகிறது.

பள்ளியில் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரித்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு, மரக்கன்றுகள் நட்டுவைத்து வளர்த்தல், தூய்மையைப் பேணுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தேசிய பசுமைப் படையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழல் துறையின் தேர்வுப்படி, விருதுநகர் மாவட்டத்தில் இவ்வாண்டில் சுற்றுச்சூழலை சிறப்பாக பராமரித்த நடுவப்பட்டி, கிளவிக்குளம், சூலக்கரை, படந்தால் அரசு மேல்நிலைப் பள்ளிகள், பாம்பாட்டி அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுசெய்யப்பட்ட பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுத்தொகை வழங்குவார் என்று மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.