2015-04-22 16:43:00

மனித வர்த்தகமும், குடியேற்றமும் ஒன்றிணைந்த விவகாரங்கள்


ஏப்.22,2015. மனித வர்த்தகமும், குடியேற்றமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த விவகாரங்கள் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் இச்செவ்வாயன்று கூறினார்.

திருப்பீட சமூக அறிவியல் கழகம், மனித வர்த்தகம் என்ற தலைப்பில் நடத்திய ஐந்து நாள் கூட்டம் குறித்து செய்தியாளர் கூட்டத்தில் விளக்கியபோது இவ்வாறு தெரிவித்தார் அக்கழகத்தின் சான்சிலர் பேரருள்திரு Marcelo Sanchez Sorondo.

ஐரோப்பா எதிர்கொள்ளும் குடியேற்றதாரர் பிரச்சனைகள் குறித்து விவாதித்த நேரத்தில் மத்திய தரைக் கடலில் 700க்கும் மேற்பட்ட குடியேற்றதாரர் இறந்துள்ளது, இவ்விவகாரம் குறித்து ஆழமாகச் சிந்திக்க வைத்ததாகவும் தெரிவித்தார் பேரருள்திரு Sorondo.

மனித வர்த்தகத்துக்கு எதிரான உலகளாவிய நிறுவனம் ஒன்று உருவாக்கப்படுமாறும் இவ்வதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம்  : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.