2015-04-16 17:05:00

ஆசியா பீபியின் கணவரும் மகளும் திருத்தந்தையுடன் சந்திப்பு


ஏப்.16,2015. பாகிஸ்தானில் தேவ நிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த ஆறு ஆண்டுகள் சிறையில் இருக்கும் அசியா பீபி அவர்களின் கணவரும், இளையமகளும், ஏப்ரல் 15, இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தனர்.

தங்களைச் சந்தித்தத் திருத்தந்தை, தங்களை ஆசீர்வதித்து, மனம் தளராதிருக்கும்படி ஊக்கமூட்டினார் என்று, ஆசியா பீபியின் கணவர் Ashiq Masih, CNA செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இப்புதன் பொது மறைக்கல்வி உரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆசியா பீபியின் கணவர் Masih அவர்களையும், 14 வயது மகள் Isham  அவர்களையும் சந்தித்து ஆசீர் வழங்கினார்.

பொய்யான வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஆசியா பீபி அவர்கள், தன் நம்பிக்கையைத் தளரவிடாமல் காப்பாற்றி வருகிறார் என்று அவரது கணவர் Masih எடுத்துரைத்தார்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.