2015-04-14 14:31:00

கடுகு சிறுத்தாலும்... ஆசைப்படுவதால், ஆயுளைக் கூட்டமுடியுமா?


மறு உலகில் நுழைந்த வழக்கறிஞர் ஒருவர், விண்ணக வாயிலை நெருங்கினார். அங்கே நீண்டு வளைந்து சென்ற வரிசையில் பல்லாயிரம் பேர் காத்துக்கிடந்தனர். ஆனால், வழக்கறிஞர், தூரத்தில் வரும்போதே அவரைப் பார்த்துவிட்ட ஒரு வானதூதர், அவரிடம் பறந்து வந்து, கையோடு அவரை அழைத்துச் சென்று, அழகான ஓர் அரியணையில் அமரச் செய்தார். "எனக்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் தருவது எனக்குச் சங்கடமாக உள்ளது" என்று கூறிய வழக்கறிஞர், தனக்கு மட்டும் ஏன் இந்த வரவேற்பு என்று கேட்டார்.

உடனே, அந்த வானதூதர், "உங்கள் கட்சிக்காரர்களுக்கு அனுப்பியுள்ள 'பில்'களில், அவர்கள் சார்பில் நீங்கள் நீதி மன்றத்தில் வாதாடியதாக குறிப்பிட்டுள்ள மணித்துளிகளைக் கூட்டிப் பார்த்தபோது, உங்கள் வயது, குறைந்தது, 255 ஆண்டுகள் என்று தெரிந்தது. அதனால்தான் இந்த வரவேற்பு உங்களுக்கு!" என்று சொன்னார். வழக்கறிஞரின் முகம் வெளிறிப்போனது.

'கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது ஆயுளோடு ஒரு நாளைக் கூட்ட முடியும்?' (மத்தேயு 6:27) என்று இயேசு கேட்டார். ஆசைப்படுவதாலும் ஒருவர் தன் ஆயுளைக் கூட்டமுடியாது. உண்மைதானே?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.