2015-04-11 16:14:00

திருத்தந்தை - ஈராண்டில் 829 புனிதர்கள், 677அருளாளர்கள்


ஏப்.11,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது ஈராண்டு பாப்பிறைத் தலைமைப் பணியில் 829 பேரைப் புனிதர்களாகவும், 677 பேரை முத்திப்பேறு பெற்றவர்களாகவும் உயர்த்தியுள்ளார்.

வருகிற செப்டம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும்போது இஸ்பானிய மறைபோதகர் Junipero Serra அவர்களை புனிதராக உயர்த்தும்போது இவ்வெண்ணிக்கை 830 ஆக உயரும்.

2014ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகிய இருவரையும் புனிதராக உயர்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை 6ம் பவுல் அவர்களையும் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தியுள்ளார்.

மேலும், வருகிற மே 23ம் தேதி சான் சால்வதோர் முன்னாள் பேராயர் மறைசாட்சி ஆஸ்கார் ரொமேரோ அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்படவுள்ளார். இவர் 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.   

திருத்தந்தை தனது இலங்கை, கொரியத் திருப்பயணங்களின்போதும் பதிய புனிதர்களை அறிவித்துள்ளார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.