2015-04-09 15:40:00

மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள திருத்தந்தை


ஏப்.09,2015. தான் வழங்கும் செய்திகள் வழியாக மட்டுமல்ல, தன் வாழ்க்கையாலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெரும்பாலான மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளார் என்று அமெரிக்கக் கர்தினால் ஒருவர் கூறினார்.

உயிர்ப்புப் பெருவிழாவையடுத்து, அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த, வாஷிங்க்டன் கர்தினால் Donald Wuerl அவர்கள், திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் அமெரிக்கப் பயணம் பற்றி பேசியபோது, இவ்வாறு கூறினார்.

மக்களைச் சென்று சந்திக்கவும், அவர்களோடு பயணிக்கவும் வேண்டும் என்று மீண்டும், மீண்டும் கூறிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் சொல்வதை, தன் செயல்களிலும் வெளிப்படுத்துவதை காண முடிகிறது என்று கர்தினால் Wuerl அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு 'கேக்' செய்ய மறுத்த ஒரு 'பேக்கரி' உரிமையாளர், 150,000 டாலர்கள் அபராதம் கட்டவேண்டும் என்று Oregon மாநிலம் விதித்துள்ள தண்டனை குறித்துப் பேசிய கர்தினால் Wuerl அவர்கள், தங்கள் மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுப்போரை இவ்விதம் தண்டிப்பது, பாகுபாடுகள் காட்டும் ஒரு மனநிலை என்று சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொருவும் தாங்கள் நம்பி பின்பற்றும் கொள்கைகளை அடுத்தவர் மீது திணிக்காமல் வாழ்வதும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட மாண்பை மதிப்பதும் நலமான சமுதாயத்தை உருவாக்கும் என்று கர்தினால் Wuerl அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.