2015-04-09 15:35:00

சுலோவாக்கியா குடியரசுத் தலைவருடன் திருத்தந்தை


ஏப்.09,2015. "உமது மன்னிப்பைப் பெறும்படி, எங்கள் பாவங்களுக்காக அழுது, கண்ணீர் விடும் கொடையை அளித்தருளும், இறைவா" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Twitter செய்தியாக, ஒன்பது மொழிகளில், இவ்வியாழனன்று வெளியானது.

மேலும், சுலோவாக்கியா குடியரசுத் தலைவர், திருவாளர் Andrej Kiska அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வியாழன் காலை 10 மணியளவில் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

சுலோவாக்கியா குடியரசுக்கும், வத்திக்கானுக்கும் இடையே 1990ம் ஆண்டு, ஏப்ரல் 19ம் தேதி உருவான உறவுகளின் 25ம் ஆண்டு நிறைவைக் குறித்தும், அதைத் தொடர்ந்து, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள் அந்நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.

திருத்தந்தையைச் சந்தித்தபின், திருவாளர் Andrej Kiska அவர்கள், திருப்பீடச் செயலர் அலுவகத்தின் நேரடிப் பொதுச்செயலர் பேரருள் திரு Antoine Camilleri அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.