2015-04-09 16:17:00

காசாப் பகுதியில், நடமாடும் மருத்துவமனை – காரித்தாஸ் முயற்சி


ஏப்.09,2015. எருசலேம் காரித்தாஸ் நிறுவனம், காசாப் பகுதியில் ஒரு நடமாடும் மருத்துவமனையைத் துவக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று காரித்தாஸ் இயக்குனர், அருள்பணி Raed Abusahliah அவர்கள் கூறினார்.

பாலஸ்தீனிய வங்கியின் துணையோடு துவங்கப்படும் இந்த முயற்சிக்கு, எருசலேம் காரித்தாஸ் அமைப்பும், பாலஸ்தீனிய வங்கியும் இச்செவ்வாயன்று கையொப்பம் இட்டன என்று Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

எருசலேம் காரித்தாஸ் நிறுவனம், காசாப் பகுதியில் துன்புறும் மக்களுக்குத் தேவையான உணவு, கல்வி வசதி, மற்றும் அவர்களுக்குத் தேவையான மனநல உதவிகளை இதுவரைச் செய்துவந்துள்ளது.

காசாப் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்துள்ள மக்கள், குறிப்பாக, குழந்தைகளுக்கென எருசலேம் காரித்தாஸ் அமைப்பு இதுவரை 10 இலட்சம் டாலர்கள் பொருளுதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.