2015-04-08 16:58:00

கனடா பிரதமருக்கு கிறிஸ்தவத் தலைவர்களின் விண்ணப்ப மடல்


ஏப்,08,2015. இராணுவ முயற்சிகள் மட்டும் நிலையான, உண்மையான அமைதியைக் கொணராது; மாறாக, பன்னாட்டு அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியே ஈராக்கிலும், சிரியாவிலும் அமைதியைக் கொணரும் என்று கனடா நாட்டு கிறிஸ்தவத் தலைவர்கள் விண்ணப்ப மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

கனடா நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், Paul-André Durocher அவர்களும், ஏனைய கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும் இணைந்து, கனடா நாட்டுப் பிரதமர், Stephen Harper அவர்களுக்கு அனுப்பியுள்ள மடலில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

மனிதாபிமான முயற்சிகளை மேற்கொள்ளும் அதே வேளையில், அப்பகுதியில் பரவிவரும் ஆயுதங்களின் அத்துமீறிய பயன்பாடு, மனித உரிமை மீறல்கள் ஆகிய அநீதிகளையும் தடுப்பதற்கு, கனடா நாட்டு அரசு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டுமென்று மதத் தலைவர்கள் தங்கள் மடலில் வலியுறுத்தியுள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.