2015-04-08 15:59:00

கடுகு சிறுத்தாலும்.... : அனைவரும் சகோதரர்தான்; ஆனால்.....


ஒரு நாட்டின் அரசரைப் பார்க்க பிச்சைக்காரர் ஒருவர் வந்திருந்தார்.

“அரசே! நான் இந்த நாட்டை சேர்ந்தவன், மேலும் நான் உறவில் உங்களுக்கு சகோதரனும் கூட. இரு சகோதரர்களில் ஒருவர் இராஜபோகங்களில் திளைப்பதும், மற்றவர் பிச்சை எடுப்பதும் முறையா? எனக்கு உதவுங்கள்” என்றார்.

அரசரோ, “நீ எனக்கு சகோதரனா? எப்படி?” என்றார்.

“அரசே! இவ்வுலகம், ஆதாம், ஏவாளிடம் இருந்து தோன்றியதுதானே? அப்படியெனில் நான் உங்கள் சகோதரன் அல்லாது வேறு யார்?” என்று கேட்டார் பிச்சைக்காரர்.

அரசர் சிரித்துக்கொண்டே,”உண்மைதான். ஒப்புக்கொள்கிறன்” என்றவாறு ஒரு நாணயத்தை அவருக்கு கொடுத்தார்.

திகைத்துப்போன பிச்சைக்காரர், “ஒரு நாணயம்தானா?” என்று கேட்க, அரசரோ மறுமொழியாக, ”ஆமாம், நான் மட்டுமா உனக்கு சகோதரன். பூமியில் உள்ள எல்லாரும்தான். எல்லாரும் ஆளுக்கொரு காசு உனக்குக் கொடுத்தால், நீ என்னை விட பணக்காரனாகிவிடலாம்” என்றார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.