2015-04-06 15:19:00

வெப்பநிலை மாற்றம் சிறிய தீவு நாடுகள் வாழ்வுக்கு அச்சுறுத்தல்


ஏப்.06,2015. உலகில் வெப்பநிலை மாற்றங்கள் கடுமையாய் இருக்கும்வேளை, சிறிய தீவு நாடுகளின் வருங்கால வளர்ச்சி குறித்து கவலை தெரிவித்துள்ளார் ஐ.நா.வின் பேரிடர் தடுப்பு அலுவலகத் துறைத் தலைவர் Margareta Wahlström.

வறுமை, உள்கட்டமைப்பு, வீட்டுவாரியம் ஆகியவற்றோடு வெப்பநிலை மாற்றங்களும் தொடர்புடையதாய் இருப்பதால், இவை பொருளாதாரத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலரின் பேரிடர் தடுப்பு நடவடிக்கையின் சிறப்பு அதிகாரி Wahlström.

கடல் மட்டம் உயருவது, புயல்காற்றால் ஏற்படும் சேதங்கள் அதிகரிப்பு போன்றவை பற்றியும் குறிப்பிட்டுள்ள Wahlström அவர்கள், பிலிப்பைன்சில் இலட்சக்கணக்கான மக்கள் Maysak புயலை எதிர்நோக்குகின்றனர் என்றும் கூறினார்.     

வனுவாத்து தீவில் ஏற்பட்ட புயல் பற்றியும் குறிப்பிட்ட Wahlström அவர்கள், பல சிறிய தீவு நாடுகள் தங்களின் உயிர்வாழ்வுக்கே அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்றும் கூறினார். 

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.