2015-03-31 16:58:00

திருஅவையின் போதனைகள் பற்றிய உறுதியான நிலைப்பாடு


மார்ச்,31,2015. திருமணம் மற்றும் பாலியல் குறித்த திருஅவையின் போதனைகள்  பற்றிய தெளிவான மற்றும் உறுதியான அறிக்கை வெளியிடப்படுமாறு நூற்றுக்கணக்கான பிரித்தானிய அருள்பணியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வருகிற அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவுள்ள குடும்பம் குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்தில் இந்த அறிக்கை வெளியிடப்படுமாறு ஏறக்குறைய 500 பிரித்தானிய அருள்பணியாளர்கள் கேட்டுள்ளனர்.

கடந்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்குப் பின்னர் பொதுநிலை விசுவாசிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்த அருள்பணியாளர்கள் இணைந்து வெளியிட்டுள்ள திறந்த கடிதத்தில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

இறைவார்த்தை மற்றும் திருஅவையின் அதிகாரப்பூர்வ படிப்பினைகளின் அடிப்படையில், திருமணம் மற்றும் உண்மையான மனிதப் பாலியல் பற்றிய திருஅவையின் பாரம்பரிய கோட்பாடுகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் பிரித்தானிய அருள்பணியாளர்கள் கேட்டுள்ளனர்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.