2015-03-31 16:43:00

ஈராக் புலம்பெயர்ந்த மக்களுடன் கர்தினால் ஃபிலோனி


மார்ச்,31,2015. ஜோர்டன் நாட்டில் தஞ்சம் தேடும் ஈராக் மக்கள் மிகுந்த மனத்தாராளத்தோடு வரவேற்கப்படுவதைக் காணும்போது, புலம்பெயரும் அம்மக்கள் தங்களின் மாண்பை மீண்டும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக, கர்தினால் Fernando Filoni அவர்கள் கூறியுள்ளார்.

ஜோர்டன் நாட்டின் அம்மான் நகரில் இரு பங்குத் தளங்களைப் பார்வையிட்டுள்ள கர்தினால் Filoni அவர்கள், அம்மக்கள் இருபது ஈராக் குடும்பங்களை ஏற்பதற்கு தயாரித்துள்ள விதம் தனக்கு வியப்பை அளித்ததாகத் தெரிவித்தார்.

ஈராக்கிலிருந்து, குறிப்பாக, மொசூல் மற்றும் நினிவே சமவெளிப் பகுதியிலிருந்து கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுணர்வையும் செபங்களையும் தெரிவிப்பதற்காக ஈராக் சென்ற நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Filoni அவர்கள், இத்தாலிய ஆயர் பேரவை வழங்கியுள்ள இனிப்புகளையும் எடுத்துச் சென்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.