2015-03-30 16:08:00

திருத்தந்தை:இயேசுவின் மறையுண்மைகளுடன் புனிதவாரத்தை வாழுங்கள்


மார்ச்,30,2015. ‘இறைத் தந்தையின் இரக்கத்தால் நிரப்பப்படும் ஒவ்வோர் இளையோரும், அதனை தங்கள் சுற்றுப்புறங்களில் பரப்பட்டும்’ என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குருத்து ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் இளையோர் தினம் குறித்து இஞ்ஞாயிறு முவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் தங்களின் பாதையில் சிறப்புடன் நடைபோட இக்கொண்டாட்டங்கள் உதவட்டும் என்றார்.

வ‌ரும் ஆண்டு போல‌ந்தின் Cracow நகரில் இடம்பெறவிருக்கும் உலக இளையோர் தினத்திற்கு எடுக்கப்பட்டுள்ள தலைப்பான 'இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்’ என்பதையும் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் ஆண்டை சிறப்பிக்கவிருக்கும் நமக்கு இத்தலைப்பு மிகவும் இயைந்த ஒன்றாக உள்ளது என்றார்.

இயேசுவின் மறையுண்மைகளை சிந்திப்பவர்களாய் இந்த புனித வாரத்தை வாழுங்கள் எனவும் அழைப்புவிடுத்த திருத்தந்தை, ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தில் கடந்த வாரம் உயிரிழந்தவர்கள் குறித்து தன் அனுதாபங்களையும், அவர்களுக்கான செப உறுதியையும் வழங்கினார்., 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.