மார்ச்,30,2015. ‘இயேசுவின் அருகில் மிக நெருங்கி வருவதற்கு, நாம் சிறப்புச் சலுகைப் பெற்றுள்ள காலம் புனித வாரம். துன்பகரமான நேரங்களில் அவருடன் நாம் கொள்ளும் நட்புணர்வு வெளிப்படுத்தப்படுகின்றது’ என இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இத்திங்களன்று திருஅவை உயர் அதிகாரிகள் சிலரை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ப்பண வாழ்வுக்கான திருப்பீட அவையின் செயலர் பேராயர் José Rodríguez Carballo, பொதுநிலையினருக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Stanislaw Rylko, இத்தாலிய ஆயர் பேரவைத்தலைவர் கர்தினால் Angelo Bagnasco, திருப்பீட நூலகத் தலைவர் பேராயர் Jean-Louis Bruguès, வத்திக்கான நகருக்கான திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் Angelo Comastri, குடுமபங்களுக்கான திருப்பீட அவையின் செயலர் பேராயர் Vincenzo Paglia ஆகியோரை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் தனித்தனியாக சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |