மார்ச்,30,2015. அடுத்த ஆண்டு இடம்பெறவிருக்கும் உலக இளையோர் தினத்திற்கான தயாரிப்புகள், போலந்தில் முழுவீச்சில் இடம்பெற்றுவருவதாக தலத்திருஅவை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
போலந்து நாட்டின் கிராக்கோவ் (Krakow) நகரில், 2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் இளையோர் தின கொண்டாட்டங்களுக்கு இன்னும் 16 மாதங்கள் இருப்பினும், புதிய விமான தளம், இரயில் மற்றும் சாலைப்போகுவரத்து மேம்பாடு, இளையோர்க்கென வடிவமைக்கப்பட்ட விவிலியப் பிரதிகள் என பல்வேறு திட்டங்கள் செயலாக்கம் பெற்று வருவதாக தலத்திருஅவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்துலக திருஅவையின் உலக இளையோர் தினத்திற்கென ஏற்கனவே அமெரிக்க ஐக்கிய நாடு, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இளைஞர்கள் தங்கள் பெயர்களைப் பதிவுச் செய்துள்ளதாக, இதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துவரும் போலந்தின் அருள்பணி Bronislaw Fidelus கூறினார்.
இறை இரக்கத்தை மையப்பொருளாகக்கொண்டு 2016ம் ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் முதல் தேதிவரை இடம்பெற உள்ள உலக இளையோர் தினத்தில் உலகெங்கிலுமிருந்து 20 இலட்சம்பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம் : CNS/ வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |