2015-03-25 15:45:00

நவி மும்பை கோவில் தாக்குதல் தொடர்பாக நால்வர் கைது


மார்ச்,25,2015. நவி மும்பை கத்தோலிக்கக் கோவில் தாக்குதல் தொடர்பாக நால்வரை, இச்செவ்வாயன்று கைது செய்திருப்பதாக, மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு தனிப்பட்ட நபரின் பகையுணர்வே காரணம் என்றும், மத எதிர்ப்பு உணர்வுகள் காரணம் அல்ல என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ராகுல் பாட்டில் என்பவர் Panvel புனித ஜார்ஜ் கத்தோலிக்க ஆலயத்திற்கு அருகே, சட்டத்திற்குப் புறம்பான தொழில் நடத்தி வந்ததாகவும், அந்தத் தொழில் குறித்து காவல் துறையினருக்குத் தகவல்கள் தந்தது கிறிஸ்தவர்கள் என்ற எண்ணத்தில், பாட்டிலும் அவரது நண்பர்களும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர் என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில், கத்தோலிக்கப் பள்ளியொன்று தாக்கப்பட்ட நிகழ்வில் தொடர்புடைய 6 பேர், இத்திங்களன்று கைது செய்யப்பட்டனர் என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : IndiaToday / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.