2015-03-24 15:37:00

உலகில் மரணத் தொழிற்சாலைகள் தடை செய்யப்பட வேண்டும்


மார்ச்,24,2015. மத்திய கிழக்குப் பகுதியின் நிலைமையை விளக்கிய அதேவேளை, உலகில் மரணத் தொழிற்சாலைகள் தடை செய்யப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ.

இத்தாலியில் புனித பாத்ரே பியோ மருத்துவமனையில் வழங்கிய பேட்டியில் இவ்வாறு அழைப்பு விடுத்த தெரிவித்த முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஆயுத உற்பத்திக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டார்.

அண்மையில் துனிசியாவில் நடந்த தாக்குதல்களுக்கு எதிரான தனது கண்டனத்தையும் அவர் வெளியிட்டார்.

மேலும், மத்திய கிழக்குப் பகுதியில் சமயப் போர் அல்லது மேற்கத்திய சிலுவைப்போர் இன்றி அனைத்துலக சமுதாயம் அப்பகுதியில் அமைதியைக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார் பேராயர் சில்வானோ தொமாசி. 

ஆதாரம் : Zenit  /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.