2015-03-24 15:27:00

இந்தியக் கிறிஸ்தவரின் தனித்துவம் கேள்விக்கு உள்ளாகியுள்ளது


மார்ச்,24,2015. இந்தியாவில் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ நிறுவனங்களும் அண்மையில் தாக்கப்பட்டுள்ள சூழலில், தங்களின் தனித்துவம் கேள்விக்கு உள்ளாகி இருப்பதாக கிறிஸ்தவர்கள் உணருகின்றனர் என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.

இந்திய பத்திரிகையைளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான Karan Thapar அவர்களுக்கு இச்செவ்வாயன்று அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்த கர்தினால் Baselios Cleemis அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிறுபான்மையினருக்கு அளித்துள்ள உறுதிப்பாட்டை எல்லாரும் கவனமுடன் பின்பற்றுவதாகத் தெரியவில்லை  என்று கூறினார்.

இந்தியக் கிறிஸ்தவர்களின் தனித்துவம் கேள்விக்கு உள்ளாகியுள்ளது, அருளாளர் அன்னை தெரேசாவின் மனிதாபிமானப் பணிகள் குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் Mohan Bhagwat அவர்கள் கூறியிருப்பது கவலை தருகின்றது என்றும் கூறினார் கர்தினால் Cleemis.

கிறிஸ்மஸ் தினத்தன்று நல்லாட்சி தினம் என பிரதமர் மோடி அவர்களின் அரசு பின்பற்றுவது குறித்து குறைகூறிய கர்தினால் Cleemis அவர்கள், நல்ல நிர்வாகம் ஒவ்வொரு நாளும் நடத்தப்பட வேண்டும் மற்றும் கிறிஸ்தவ விழாவின் மேன்மை மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஆதாரம் : Business-standard /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.