2015-03-23 15:58:00

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்


மார்ச்23,2015. பாகிஸ்தானில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து Youhanabad பகுதி கிறிஸ்தவர்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்வதாக அந்நகர் அருள்பணியாளர் பிரான்சிஸ் குல்ஸார் தெரிவித்தார்.

தாலிபான் தீவிரவாதிகளால் இம்மாதம் 15ம் தேதி இரு கோவில்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பிதெஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த Youhanabad பங்குதள அருள்பணியாளர் குல்ஸார் அவர்கள், தாலிபான் தாக்குதலைத் தொடர்ந்து இரு இஸ்லாமியர்களை கிறிஸ்தவர்கள் கொன்றுள்ளது கண்டனத்துக்குரியது என்றும், இஸ்லாமியர்களிடம் தலத்திருஅவை மன்னிப்புக் கேட்டுள்ளதாகவும் கூறினார்.

இஸ்லாமியர்கள் தங்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சத்தால் பல கிறிஸ்தவர்கள் Youhanabad பகுதியை விட்டு, தங்கள் குடும்பத்தோடு வெளியேறியுள்ளதாகவும், செபம் மட்டுமே தற்போது கிறிஸ்தவர்களின் பலமாக இருப்பதாகவும் கூறினார் அருள்பணி குல்ஸார்.

ஆதாரம் : FIDES/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.