2015-03-21 15:46:00

சுரங்க நிறுவனங்கள் இலத்தீன் அமெரிக்காவில் உரிமை மீறல்


மார்ச்,21,2015. இலத்தீன் அமெரிக்காவில் சுரங்க நிறுவனங்களை நடத்தும் அமெரிக்க ஐக்கிய நாடும், கானடாவும், பூர்வீக இன மற்றும் நலிந்த மக்களைப் பாதுகாக்கும் சட்டங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர் இலத்தீன் அமெரிக்க ஆயர்கள்.

வாஷிங்டனில் அமெரிக்க நாடுகளின் மனித உரிமைகள் குழுவிடம் இவ்வாறு தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர் இலத்தீன் அமெரிக்க ஆயர் பிரதிநிதிகள்.

இலத்தீன் அமெரிக்காவில் பல்வேறு சுரங்க நிறுவனங்களை நடத்தும் அமெரிக்க ஐக்கிய நாட்டு மற்றும் கானடாவின் பன்னாட்டு நிறுவனங்கள் பொதுநல வாழ்வுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் சேதங்களை ஏற்படுத்துகின்றன என்று இந்த ஆயர் பிரதிநிதிகள் புகார் அளித்தனர்.

பிரேசில், குவாத்தமாலா, பெரு, ஈக்குவதோர், ஹொண்டூராஸ், மெக்சிகோ ஆகிய ஆறு நாடுகளில் ஏழைகளும், பூர்வீக இனத்தவரும் சுரங்க நிறுவனங்களால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்ற விபரங்களை இப்பிரதிநிதிகள் சமர்ப்பித்தனர்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.