2015-03-20 16:00:00

அனைத்துலக மகிழ்ச்சி தினம், மகிழ்வான பூமி-மகிழ்வான மக்கள்


மார்ச்,20,2015. மார்ச், 20 இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக மகிழ்ச்சி தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், உலக சமுதாயத்தின் மகிழ்வே, ஐ.நா. நிறுவனத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகிழ்வை அடைவது கடினமான முயற்சியாக உள்ளது எனவும், அனைத்து மக்களும் அமைதியிலும், வளமையிலும், மனித மாண்புடனும் வாழவேண்டுமென்று தான் வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார் பான் கி மூன்.

மக்களும், இந்தப் பூமியும் வெப்பநிலை பாதிப்பின் தாக்கமின்றி உறுதியான முன்னேற்றம் காணவே எல்லாரும் விரும்புகின்றனர், இந்த உலக நாளில் நம் உலகை மகிழ்வோடு வைத்திருப்பதற்கு நாம் எல்லாரும் முயற்சிப்போம் என்று தனது செய்தியில் கூறியுள்ளார் பான் கி மூன்.

மக்களைப் பாதுகாக்க வேண்டுமெனில் இந்தப் புவியைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2015ம் ஆண்டின் அனைத்துலக மகிழ்ச்சி தினம் மகிழ்வான பூமி-மகிழ்வான மக்கள் என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.