2015-03-18 16:32:00

புனித போஸ்கோ - பங்கு கோவிலுக்கு திருத்தந்தையின் வாழ்த்து


மார்ச்,18,2015. குழந்தைகளுடனும் இளையோருடனும் அதிகம் உழைத்த புனித டோன் போஸ்கோவின் பெயரால் துவக்கப்படும் பங்கு கோவிலுக்கு தன் ஆசீரை வழங்குவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேராயராகப் பணியாற்றிய புவனோஸ் அயிரேஸ் நகரில், மார்ச் 22, வருகிற ஞாயிறன்று துவக்கப்படும் புனித டோன் போஸ்கோ பங்குக் கோவிலுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், நடைபெறும் ஆண்டு, இப்புனிதர் பிறந்த இரண்டாம் நூற்றாண்டு என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

புனித டோன் போஸ்கோவின் பெயரால் துவக்கப்படும் பங்குத்தளம், குழந்தைகள், மற்றும் இளையோர் மீது தனி கவனம் செலுத்தி, அவர்கள் மாண்புமிக்க வாழ்வை மேற்கொள்ள உதவட்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.