2015-03-18 16:38:00

இந்திய கத்தோலிக்க ஆயர்கள்,வங்காள முதலமைச்சருக்கு விண்ணப்பம்


மார்ச்,18,2015. 71 வயதான அருள் சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியவர்களை உடனடியாக கைது  செய்யவேண்டும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, வங்காள முதலமைச்சர், மமத்தா பானெர்ஜி அவர்களுக்கு இப்புதனன்று விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்த வன்கொடுமைக்கு உள்ளான அருள் சகோதரியை, இப்புதனன்று சந்தித்த இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர், கர்தினால் Baselios Cleemis அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் குறிப்பிட்டார்.

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வன்முறையில் ஈடுபட்டோரை விரைவில் சட்டத்தின் கரங்களில் ஒப்படைக்கும் பொறுப்பு, வங்காள அரசைச் சார்ந்தது என்று கர்தினால் Cleemis அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

கொல்கத்தாவுக்கருகே ரணகாட் (Ranaghat) எனுமிடத்தில் நிகழ்ந்த இந்தக் கொடுமை குறித்தும், ஹரியானா மாநிலத்தில் கிறிஸ்தவ கோவில் ஒன்று தாக்கப்பட்டது குறித்தும் உடனடியான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியுள்ளதாக UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.