2015-03-14 14:59:00

கடுகு சிறுத்தாலும் - அவர் மாறத் துவங்கினார்...


"நீ மாறவேண்டும், மாறவேண்டும்" என்ற சொற்களை மீண்டும், மீண்டும் கேட்டுவந்த ஓர் இளைஞர், எப்படி மாறுவது என்று தெரியாமல் குழம்பிப்போனார். மற்றவர்கள் எதிர்பாக்கும் மாற்றங்கள் தன்னிடம் உருவாகவில்லையே என்ற ஏக்கத்தில், இன்னும் மோசமாக மாறினார்.

அவர்மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த ஓர் இளம்பெண்ணும், "நீ மாறவேண்டும்" என்ற பல்லவியை நாள்தோறும் பாடி வந்தது, இளைஞரை மேலும் விரக்தி அடையச் செய்தது. ஒருநாள், அந்த இளம்பெண் இளைஞரிடம் வந்து, "நீ இப்போது இருப்பதுபோலவே எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. நீ மாறவேண்டாம்" என்று சொன்னார். இதைக் கேட்ட இளைஞரின் உள்ளத்திலிருந்த இறுக்கங்களும், ஏக்கங்களும் மறைந்தன.

அவர் மாறத் துவங்கினார்.

ஆதாரம் : The Song of the Bird / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.