2015-03-13 14:31:00

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருணையின் திருத்தந்தை


மார்ச்,13,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரின் இதயத்திலும் கருணையின் திருத்தந்தையாக நோக்கப்படுகிறார் என்று கூறினார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

மாபெரும் கருணையின் காவலராக, கருணையின் சொத்தாக விளங்கும் அப்போஸ்தலிக்க பாவமன்னிப்புச் சலுகை நிறுவனத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிக நெருங்கியவராக இருக்கிறார், ஏனெனில் திருத்தந்தை, ஒவ்வொருவரின் இதயத்திலும் கருணையின் திருத்தந்தையாக நோக்கப்படுகிறார் என்று கூறினார் கர்தினால் Mauro Piacenza.

அப்போஸ்தலிக்க பாவமன்னிப்புச் சலுகை நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் அந்நிறுவனம் நடத்திய பயிற்சியில் பங்கு கொண்ட 500 பேருடன் திருத்தந்தையை சந்தித்து வாழ்த்தையும் செபங்களையும் தெரிவித்தபோது இவ்வாறு கூறினார் அந்நிறுவனத் தலைவர் கர்தினால் Piacenza.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி கத்தோலிக்க திருஅவையின் 266வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் இரண்டாவது ஆண்டு நிறைவு இவ்வெள்ளியன்று இடம்பெற்றது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.