2015-03-13 15:02:00

கிறிஸ்தவர்களின் பாதுகாப்புக்கு டெல்லி காவல்துறை முகநூல்


மார்ச்,13,2015. டெல்லியில் கிறிஸ்தவ நிறுவனங்களும், கிறிஸ்தவர்களும் பலமுறை தாக்கப்பட்டுள்ளதையடுத்து, டெல்லி கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்தில் டெல்லி காவல்துறை முகநூல் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

“டெல்லி காவல்துறை சிறுபான்மை சகோதரன்” என்ற தலைப்பில் இப்புதிய முகநூல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அன்பு கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, டெல்லியில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நிறுவனங்களின் பாதுகாப்பில் டெல்லியில் நிலவும் சட்டம்-ஒழுங்குமுறை பற்றிய உங்களின் கருத்துக்களைப் பதிவுசெய்யுங்கள் என அதில் எழுதப்பட்டுள்ளது.

மேலும், சிறுபான்மையினரின் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார் என பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.