2015-03-10 16:59:00

தீவிரவாதிகாளால் கொல்லப்பட்டவர்களுக்கு பங்களாதேஷில் வழிபாடு


மார்ச்,10,2015. ஐ.எஸ். இஸ்லாமிய தீவிரவாதிகளால் மத்தியக் கிழக்குப் பகுதியில் கொல்லப்பட்ட மக்களுக்கென சிறப்பு செபவழிபாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது பங்களாதேஷ் தலத்திருஅவை.

ஐ.எஸ். இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மக்களுக்காக அமைதி ஊர்வலம் ஒன்றை அண்மையில் மேற்கொண்ட பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள், இம்மாதம் 22ம் தேதி ஞாயிறன்று, அனைத்து கிறிஸ்தவக் கோவில்களிலும் சிறப்பு செபவழிபாடு இடம்பெறும் என அறிவித்தனர்.

மதத்தின் பெயரால் அப்பாவிக் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என உரைத்த பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள், தீவிரவாதிகளின் இந்த கொலைகள் நிறுத்தப்பட அனைத்து உலகத் தலைவர்களும் முயற்சி செய்ய வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.

ஐ.எஸ். இஸ்லாம் தீவிரவாதிகளின் கைகளில் பலியான கிறிஸ்தவர்களுக்கென அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற ஊர்வலத்தின்போது, மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

ஆதாரம்: Asia News/வத்திக்கான வானொலி.








All the contents on this site are copyrighted ©.