2015-03-10 16:40:00

எகிப்தில் காப்டிக் அன்னை மரி கோவில் தாக்கப்பட்டுள்ளது


மார்ச்,10,2015. எகிப்தின் Kafr el-dawar பகுதியிலுள்ள காப்டிக் கத்தோலிக்க வழிபாட்டுமுறையின் அன்னைமரி கோவில், தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய சில தீவிரவாதிகள், அதிகாலையில் இப்பகுதிக்கு வந்து, எறிகுண்டு மூலம் இக்கோவிலைத் தாக்கியதில் கோவில் சேதமடைந்துள்ளதுடன், பாதுகாப்புக்காக நின்ற இரு காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த அலக்சாந்திரியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் அடெல் சாக்கி அவர்கள், இத்தகைய தாக்குதல்கள் அண்மை காலமாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்றார். 

ஆதாரம்: FIDES/வத்திக்கான வானொலி.








All the contents on this site are copyrighted ©.