2015-03-09 15:39:00

திருத்தந்தையுடன் பெல்ஜியம் அரசத் தம்பதியர் சந்திப்பு


மார்ச்,09,2015. "தாழ்ச்சியே மனிதரை மீட்கிறது. தற்பெருமையோ அவர்கள் தங்கள் பாதையை இழக்கச் செய்கிறது" என்று, தன் Twitter பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்திங்களன்று பெல்ஜியம் மன்னர் Philippe அவர்களையும், அரசி Mathilde அவர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

அதன்பின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், நாடுகளுடன் உறவுகொள்ளும் வத்திக்கான் துறையின் செயலர், பேராயர் Paul Richard Gallagher அவர்களையும், பெல்ஜியம் அரசத் தம்பதியர் சந்தித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.