2015-03-09 15:48:00

திருத்தந்தை - பெண்களை ஒதுக்கிவாழும் உலகம், வளமற்ற உலகம்


மார்ச்,09,2015. பெண்களை ஒதுக்கிவாழும் உலகம், கனிதராத, வளமற்ற ஓர் உலகாக மாறிவிடும் என்று, உலக மகளிர் நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

உலக மகளிர் நாளான இஞ்ஞாயிறன்று மூவேளை செப உரை வழங்கியபின், இறுதியில், உலக மகளிருக்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்கள், வாழ்வைக் கொணர்பவர்கள் மட்டுமல்ல, உலக விடயங்களை வேறு, வேறு கண்ணோட்டங்களில் நோக்குவதற்கும் உதவுபவர்கள் என்று கூறினார்.

உலக விடயங்களை வேறு கோணங்களில் பார்த்து, அவற்றை கற்பனைச் சக்தியுடனும், பொறுமையுடனும் இதயத்தில் உணரவல்லவர்கள் பெண்கள் என்றும் பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதாபிமானமும், வரவேற்கும் மனநிலையும் கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்ப உழைக்கும்  பெண்களுக்கும், திருஅவையிலும் சமுதாயத்திலும் நற்செய்தியின் சாட்சிகளாக விளங்கும் பெண்களுக்கும் தன் தனிப்பட்ட வாழ்த்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக மகளிர் நாளன்று வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.