2015-03-09 15:28:00

அமைதியிலும் எளிமையிலும் செயலாற்றுவதே இறைவனின் பாணி


மார்ச்,09,2015. ஆடம்பரமாக அல்ல, மாறாக அமைதியிலும் தாழ்ச்சியிலும் செயலாற்றுவதே இறைவனின் பாணி என இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், படைப்பின் துவக்க காலத்திலேயே இறைவன் பெரிய மாய வித்தைகளால் அல்ல, மாறாக சாதாரண களிமண்ணிலிருந்து மனிதனை உருவாக்கியதைக் காண்கிறோம் என்றார்.

மோயீசன் உதவியுடன் மக்களை மீட்டது,  எரிக்கோவை வீழ்த்தியது, சிறுவன் தாவீதின் மூலம் கோலியாத்தை வீழ்த்தியது, மூன்று அரசர்களும் மாடடைக் குடிலில் ஒரு குழந்தையைக் கண்டது என அனைத்தும் சிறியவைகளாக, தாழ்ச்சியுடையவைகளாக இருந்தன என்ற திருத்தந்தை,  பாலைவனத்தில் இயேசுவை சோதித்த சாத்தானுக்கு வழங்கப்பட்ட பதிலுரைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

அமர்ந்து சிந்தித்தோமென்றால், நம் வாழ்விலும்  எளிய செயல்கள் மூலமே இறைவன் நம்மை முன்னோக்கி அழைத்துச் சென்றுள்ளதை உணர்வோம் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.