2015-03-07 14:38:00

கடுகு சிறுத்தாலும் - கோவில்கள் சுத்தம் செய்யப்படவேண்டும்


தென் ஆப்ரிக்கா, இனவெறியில் மூழ்கியிருந்த காலம் அது. கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு கோவிலில் நுழைந்தார். அருகிலிருந்த ஒரு காவல்துறை அதிகாரி, அவரிடம் விரைந்து சென்று, "நில்! வெள்ளையினத்தவர் மட்டுமே இக்கோவிலுக்குள் நுழையமுடியும். நீ உள்ளே போகக்கூடாது!" என்று சொல்லித் தடுத்தார். கறுப்பின மனிதர் அவரிடம், "ஐயா, நான் இந்தக் கோவிலைச் சுத்தம் செய்யவே போகிறேன்" என்று கூறினார். உடனே, அந்தக் காவல் துறை அதிகாரி, "அப்படியென்றால் உள்ளே போகலாம். ஆனால், அங்கு நீ செபித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தால், பின்னர், உனக்குத் தொல்லைதான்!" என்று எச்சரித்து உள்ளே அனுப்பினார்.

அதிகமான கோவில்கள் சுத்தம் செய்யப்படவேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.