2015-03-06 14:58:00

மனித உரிமைகளைக் காக்குமாறு ஐ.நா. வலியுறுத்தல்


மார்ச்,06,2015. இன்றைய உலகில் பயங்கரவாதப் பேரலைகள் நாளுக்கு நாள் உயர்ந்துவரும்வேளை, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் மனித உரிமை கோட்பாடுகள் காக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர்.

47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் அவையில் உரையாற்றிய, ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர் Zeid Ra'ad Al Hussein அவர்கள், எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், உலக நாடுகள் உருவாக்கிய மனித உரிமைகளை உறுதியாய்க் கட்டிக்காக்குமாறு கேட்டுக்கொண்டார்.

டுவிட்டர், blog அல்லது உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவரின் பேச்சால் அச்சுறுத்தப்படுவதாக, உலகின் சக்திமிக்க தலைவர்கள் உணர்ந்தால், இந்நிலை தலைவர்களின் பலவீனங்களை வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார் Zeid.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், மக்களாட்சி மற்றும் மனித உரிமை விழுமியங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்றும் உரைத்த Zeid, மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் பரவியுள்ள, கடுமையான இன மற்றும் மத வெறுப்புச் செயல்கள்  குறித்து கவலை தெரிவித்தார்.

இந்நாடுகளில் இடம்பெறும் அநீதியான கோட்பாடுகள், அவமதிப்புகள், தனிமைப்படுத்தல் போன்றவற்றால் மக்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் Zeid.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.